கலிங்கப்பட்டியில் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டார் வைகோ

இந்த சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் மதிமுகவினரின் வாக்குகள் யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார் வைகோ. காலை ஓட்டுப்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு
வந்த வைகோ ஓட்டு போட வரிசையில் காத்திருந்தார். பின்னர் தனது வாய்ப்பு வந்ததும் அவர் உள்ளே சென்று ஓட்டுப் போட்டார்.
ஓட்டுப் போட்ட பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. ஆனாலும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் அதை முறையாக செய்துள்ளேன் என்றார்.
தான் யாருக்கு வாக்களித்துள்ளேன் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
'சித்திரைத் திருநாள் கண்ணீரைத் துடைக்கட்டும்':
இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நெருப்பாகத் தகிக்கும் அனல் வெயிலோடு தொடங்கும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் வழக்கம், தமிழ்நாட்டு மக்களிடம் தொடர்ந்து வருகிறது. மதுரை மூதூரில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கிறது.
சித்திரைத் திங்களில் முழுநிலவு நாளில், காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் கடற்கரையில் கூடி, இந்திர விழா கொண்டாடியதாக, சிலப்பதிகாரம் கூறுகிறது.
இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவீசும் விடிவெள்ளியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த திருநாளாகிய ஏப்ரல் 14 ஆம் நாளில், சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற வகையில், சாதி, மத பேதங்கள் இல்லாத சகோதரத்துவம் தழைக்க, தமிழக மக்கள் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications