சாய்பாபா உடல்நிலையில் முன்னேற்றம்-தொடர்ந்து சிகிச்சை
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் உடல்நிலையில் மெதுவாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிக்ச்சை அளித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஏ.என்.சபாயா கூறியதாவது,
சாய்பாபாவின் முக்கிய உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்கின்றன. அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது டயாலிஸிஸும் செய்யப்படுகிறது என்றார்.