ஆராய்ச்சியை மேம்படுத்த சென்னையில் மெகா அறிவியல் நகரம்
சென்னை: ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் சென்னையில் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்களை அடக்கிய மெகா அறிவியல் நகரம் உருவாக்கப்படவிருக்கிறது. இதற்காக முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டை அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த விளங்கும் மாநிலமாக்கத் திட்டமிட்டு சென்னையில் மெகா அறிவியல் நகரம் அமைக்க முடிவு செய்தார். இது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெகா அறிவியல் நகரம் அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் குழு ஒன்று கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.தங்கராஜ், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் க.கணேசன், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி மன்ற துணைத்தலைவர் எம்.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சென்னை மெகா அறிவியல் நகரம் உருவாக்குவது பற்றிய இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., தரமணியில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசின் கல்வி நிறுவனங்கள், சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகம், தரமணி வளாகம், கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரம், பிர்லா கோள் அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையம் உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும்.
அத்தனை நிறுவனங்களில் உள்ள வசதி வாய்ப்புகளை ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தி ஆராய்ச்சி பணியை மேம்படுத்த இந்த மெகா அறிவியல் நகரம் பயன்படும். இத்தனை நிறுவனங்களையும் இணைப்பதுதான் சென்னை மெகா அறிவியல் நகரம் ஆகும்.
மெகா அறிவியல் நகரத்திற்காக 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெரிய கூட்டரங்கு பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. அது தவிர சில மையங்களும் கட்டப்படவுள்ளன.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications