கொலை நகரமாகும் மதுரை: மக்கள் பீதி
மதுரை: மதுரையில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால் அங்குள்ள பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள உச்சபரம்பு என்னும் இடத்தில் டீக்கடை வைத்திருந்தவர் மணிகண்டவேலன் (17). நேற்று கள்ளழகர் திருவிழா நடந்ததால் அவர் கடையை திறக்கவில்லை.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் மணிகண்டவேலனின் டீக்கடைக்குள் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அவர் கடைக்குச் சென்று அங்கு குடிபோதையில் இருந்தவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மணிகண்டவேலனை சரமாரியாக வெட்டியது. இதைப் பார்த்து தடுக்க வந்த துணி தேய்க்கும் தொழிலாளி விஸ்வநாதனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்தனர்.
இது குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உச்சிபரம்பைச் சேர்ந்த மணிகண்டன் (18), ராமு (27), மணி (23), வீரமணி (20), ரமேஷ் (28), சவுந்தர் (24) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதில் மணியும், வீரமணியும் சகோதரர்கள். கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் ஒரு கொலை:
மதுரை துவரிமான் களத்துமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (37). டிரைவர். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடித்துவிட்ட தனது நண்பர்களுடன் தகராறு செய்துள்ளார். இதில் சுந்தர் அரிவாளால் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரன் (19) என்பவரை கைது செய்தனர்.
மேலும் ராமு உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள். மதுரையில் அடிக்கடி கொலைச் சம்பவம் நடப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications