இந்த ஆண்டும் பருவமழை போதுமான அளவு பெய்யும்-வானிலை ஆய்வு மையம்

ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கும் என்றும், செப்டம்பர் வரை இந்த மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் மற்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அஜீத் தியாகி ஆகியோர் இந்த விவரங்களை வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு மழை அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
எனினும் வட கிழக்கு மற்றும் வட மேற்குப் பகுதிகளில் பருவமழை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பிற பகுதிகளில் சராசரியான அளவுக்கு மழை பெய்யும்.
ஒட்டுமொத்தத்தில் நீண்ட கால சராசரி மழை அளவான 98 சதவீதம் அளவுக்கு நாடு முழுவதுமே இந்த பருவ காலத்தில் மழை பெய்யும். நீண்ட கால சராசரி மழை அளவு என்பது கடந்த 50 ஆண்டு கால மழையின் சராசரி அளவாகும். இது இப்போது 89 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இந்த 89 செ.மீ. என்ற அளவில் 96 முதல் 104 சதவீதம் வரையில் மழை அளவு பதிவானால் இயல்பான மழை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு நாட்டில் பருவமழை நன்கு பொழிந்ததை அடுத்து சாதனை அளவாக 23.58 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு எல் நினோ (El Nino) என்ற வானிலை மாற்றம் காரணமா மழை குறைந்து வறட்சி ஏற்பட்டது. 2010ம் ஆண்டில் அதன் எதிர் நிலையான லா நினா (La Nina) என்ற வானிலை நிலவியது. இதனால் அளவுக்கு அதிகமாகவே மழை பெய்தது.
ஏப்ரல் மத்திய வாரத்தில் லா நினாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் தாக்கம் மிக மிக அதிகமாகக் குறைந்தால் அது எல் நினோவாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட நிலையில் மழை அளவு குறையலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. பூமியின் வட பகுதியில் அதிகமான பனிப் பொழிவு ஆரம்பித்துள்ளதால் வெப்ப நிலை பெருமளவு அதிகரிக்க வாய்ப்பில்லை.
இதனால் இந்த ஆண்டு கோடையில் கூட நாட்டின் வட பகுதிகளில் அதிகளவில் வெப்பத்தின் தாக்கம் இல்லை என்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications