அதிகாரியை தாக்கியதாக வழக்கு-தள்ளுபடி செய்ய கோரி அழகிரி மனு
மதுரை: அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது மேலூர் தொகுதிக்குட்பட்ட அம்பலக்காரன்பட்டி கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் உதவி தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து, வீடியோகிராபர் கண்ணன் ஆகியோர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கீழவளவு போலீசில் அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் ஆகிய 4 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த 4 பேருக்கும் முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இதற்கிடையில் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட தாசில்தார் காளிமுத்து, தன்னை யாரும் தாக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்தார். ஆனால், காளிமுத்துவை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்தது.
இந் நிலையில் அழகிரி உள்ளிட்ட 4 பேரும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவி்ல், கடந்த 1ம் தேதி ஒரு கோவில் நிகழ்ச்சியின்போது தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக எங்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். புகார் அளித்ததாக கூறப்படும் தாசில்தார் காளிமுத்து, மாவட்ட கலெக்டர் சகாயத்தின் தூண்டுதலின் பேரில் பொய் புகார் அளித்ததாகவும், கோவில் நிகழ்ச்சியில் என்னை யாரும் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே எங்கள் மீது காழ்புணர்ச்சி காரணமாகவும், களங்கப்படுத்தும் நோக்கத்தோடும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications