புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்ய வேண்டும்! - குதிக்கும் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை அமைச்சர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அடுத்தடுத்த வாரங்களில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளின் பெயர்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவு அரசியல் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மீது தடை விதிக்குமாறு இந்தியாவிடம் ராஜபக்சே கோரியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications