திருமணம்..மோசடி: மத்திய பிரதேச பெண் தந்தையுடன் கைது
திருச்சி: திருமணம் செய்து கொண்டு கணவரை ஏமாற்றி, அவரது ரூ. 5 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற மத்தியப் பிரேதச பெண்ணையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் கூட்டுறவு நகரை சேர்ந்த காந்திலாலின் மகன் விஜய்குமார் (30) பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த இவருக்கு பெண் பார்க்க சென்னையை சேர்ந்த புரோக்கர்கள் சுகன்ராஜ் மற்றும் விஜயராஜ் ஆகியோரை காந்திலால் அணுகினார்.
அவர்களது ஏற்பாட்டின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரது மகள் பூஜாகுமாரி என்பவருக்கும் விஜயகுமாருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி துறையூரில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சில நாட்களில் ராஜேஷ்குமார் ஜெயின் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விஜய்குமாரிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றார். மேலும் பூஜாகுமாரியையும் ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
ஊருக்கு சென்று நீண்ட நாட்கள் ஆகியும் மனைவி திரும்பி வராததால் விஜயகுமார் பிகானீர் சென்று விசாரித்த போது பூஜாகுமாரி கொடுத்த முகவரி பொய் என்பதும், அந்த முகவரியில் பூஜாகுமாரி, ராஜேஷ் என்ற பெயரில் யாருமே இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனக்கு பெண் பார்த்து கொடுத்த புரோக்கர்களிடம் பூஜாகுமாரியின் உண்மையான முகவரியை கேட்ட போது, ரூ.2 லட்சம் தந்தால் பூஜாகுமாரியின் முகவரியை தருவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து திருமணம் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதை விஜய்குமார் உணர்ந்தார். இது குறித்து துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த மோசடி கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனது பெயரில் வழக்கு பதிவாகியிருப்பதையோ, தங்களை போலீசார் தேடி வருவதையோ அறியாத பூஜாகுமாரி தனது தந்தை ராஜேஷ்குமாருடன் கணவர் விஜய்குமாரை சந்திக்க மீண்டும் துறையூர் வந்தார்.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது உண்மையான பெயர் பூஜா விஸ்வகர்மா என்றும், தந்தையின் பெயர் ராஜேஷ் விஸ்வகர்மா என்றும் தெரியவந்தது.
பூஜாகுமாரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது தந்தை டிரைவர் வேலை செய்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு பணிக்கு செல்ல முடியாமல் வருமானத்திற்கு வழி இன்றி இருந்தோம். இதையடுத்து சென்னையில் உள்ள புரோக்கர்கள் சுகன்ராஜ் மற்றும் விஜயராஜ் ஆகியோரை அணுகி குடும்ப சூழ்நிலையை எடுத்துக்கூறி எனக்கு திருமணம் செய்து அதன் மூலம் வரும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம்.
அதன்மூலம் காந்திலாலின் மகனை திருமணம் செய்து கொண்டேன். அடுத்த 15 நாட்களில் ரூ. 5 லட்சம் பணத்தையும் வாங்கிக் கொண்டு தப்பிவிட்டோம்.
அந்தப் பணம் செலவழிந்து விட்டதால் மீண்டும் விஜயகுமாரிடமே சென்று எனது உடல்நிலை சரியில்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சமாதானம் கூறிக் கொள்ளலாம் என்று நினைத்து திரும்பி வந்தோம். அப்போது என்னையும் தந்தையையும் போலீசார் கைது செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரையும் போலீசார் துறையூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது போன்ற பல மோசடித் திருமணங்களை நடத்தி வைத்து தலைமறைவாக உள்ள சென்னையை சேர்ந்த புரோக்கர்கள் சுகன்ராஜ், விஜயராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications