ஐ.நா. அறிக்கையை வெளியிடவிடாமல் இந்தியா தடுப்பதாக சந்தேகம்: தொ. பரமசிவம்
நெல்லை: இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.சபையின் அறிக்கையை வெளியிடவிடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் தொ. பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது,
இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு. எனவே மத்திய அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இலங்கை தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா. தயார் செய்துள்ள அறிக்கையை வெளியிட கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று இலங்கை காலில் விழுந்து கெஞ்சுகிறது. ஆனால் இலங்கையின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துவிட்டது. இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்த அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கையை வெளியிடாமல் தடுக்க இந்தியாவும் துணை போகின்றதோ என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். ஐ.நா. அறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும். இது தான் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பில் இன்று (ஏப்ரல் 24 ) பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், இலங்கை தமிழர் பகுதிக்கு நேரடியாக சென்று வந்த வழக்கறிஞர் கயல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சேவியர், மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நிஜாம், வக்கீல் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர் என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications