29ம் தேதி வரை சாய்பாபா சமாதியை பக்தர்கள் தரிசிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட சமாதியை, வருகிற 29ம் தேதி வரை பொதுமக்களும், பக்தர்களும் தரிசிக்கலாம் என்று சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 24ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் இன்று காலை புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சாய் குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இடத்தை பக்தர்கள் பார்வையிட சத்ய சாய் அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது.
வருகிற 29ம் தேதி வரை இந்த இடத்தை பக்தர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி எழுப்பப்பட்டு அங்கு தங்கச் சிலையை நிறுவ அறக்கட்டளை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications