சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆதாரங்கள் வெளியாகின
கொழும்பு: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின்போது சிங்கள ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொண்டது தொடர்பான புதிய புகைப்பட ஆதாரங்களும், வீடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.இவை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 134 பேர் இலங்கை ராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இவை.
இவற்றில் உள்ள பலரை மிக நெருக்கமான நிலையில் வைத்து சிங்கள ராணுவத்தினர் கொன்றிருப்பதாக தெரிகிறது. மேலும் பலரை மிகவும் சித்திரவதை செய்தும், எரிகுண்டுகளால் சுட்டும் கொன்றுள்ளனர் என்றும் தெரிகிறது.
கொல்லப்பட்டவர்களின் உடலை கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் ஆடு மாடுகளைப் போல தரையோடு தரையாக வைத்து இழுத்துச் செல்வது போலவும் காட்சிகள் உள்ளன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகள் என்று தெரிகிறது. பெண் போராளிகளை மானபங்கப்படுத்தியும் சித்திரவதை செய்து கொன்றுள்ளது சிங்கள ராணுவம். அவர்களின் உடைகளைக் களைந்து ஓட விட்டு பின்னர் இழுத்துச் செல்கிறார்கள் ராணுவ வீரர்கள். இது வீடியோவாகவும் வெளியாகியுள்ளது.
காண்போர் இதயங்களை நொறுங்கச் செய்யும் வகையில் இந்த புகைப்படங்களும், வீடியோ காட்சியும் உள்ளன.
ஈழத் தமிழரின் இனப்படுகொலை-மேலும் செய்திகள்..
இனப்படுகொலைகள் - மேலும் படங்கள்..