பழனி முருகன் கோவில் உண்டியல் வசூல் ஒரு கோடியைத் தாண்டியது
பழனி: புகழ் பெற்ற பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1 கோடியைத் தாண்டியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு பழனி. இங்கு வீற்றிருக்கும் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு உண்டியலில் சேர்ந்த பணம் மற்றும் நகைகள் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன.
இதில் உண்டியலில் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 540 கிடைத்தது. மேலும், தங்கம் ஆயிரத்து 297 கிராமும், வெள்ளி 6 ஆயிரத்து 480 கிராமும், வெளிநாட்டு கரன்சி 322- ம் வசூலாகி இருந்தது.
இந்த நிகழ்வின்போது கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், உதவி ஆணையர் நடராஜன் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.