விருத்தாசலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி வெடிப்பு: எஸ்ஐ மீது வழக்கு
விருத்தாசலம்: விருத்தாசலம் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி வெடித்தது. இது தொடர்பாக காவல் துறை உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த 22-ம் தேதி காலை துப்பாக்கி வெடித்தது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் நேற்றிரவு தனது பெல்ட்டில் இருந்த கை துப்பாக்கியை கழற்றியபோது திடீரென வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த விருத்தாசலம் தேர்தல் அலுவலர் முருகேசன், உதவி தேர்தல் அலுவலர் சரவணன், டி.எஸ்.பி.க்கள் குப்புசாமி, மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து திட்டக்குடி காவல் ஆய்வாளர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.












Click it and Unblock the Notifications