'ஏழரை மணிக்கே'...வாக்கு எண்ணிக்கை நேரத்தில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஏழரை மணிக்கே வாக்குப் பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழரை மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். 8 மணிக்குள் அது முடியாவிட்டால் அந்தப் பணியை உதவித் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு 8 மணி முதல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications