நாகை அருகே சாலை விபத்து-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் சீர்காழி அருகே நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன பொது மேலாளர் ஜோசப் ஜெயராஜ். 50 வயதான இவர் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று வேளாங்கண்ணி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சீர்காழி அருகே சூரக்குடி என்ற இடத்தில் இவர்களது கார் வந்தபோது எதிரா வந்த டூரிஸ்ட் பஸ்ஸுடன் மோதிக் கொண்டது. இதில், ஜெயராஜ், அவரது பத்து வயது மகன் ஜோவித், 14 வயது மகள் ஜெனிட்டா, காரை ஓட்டி வந்த 40 வயதான மரியோ, அவரது மகள் ஹரிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மரியோவின் மனைவி மஞ்சு, ஜெயராஜின் மனைவி குளோரி ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+