கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கூடுதல் எஸ்.பி வீட்டில் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் திருட்டு போயுள்ளது.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணிபுரிந்து வருகிறார் முத்துசாமி. இவர் தனது குடும்பத்துடன் கோவை காந்திபுரம் அருகேயுள்ள நியூசித்தாபுதூரில் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள உறவினரைச் சந்திக்க வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று முத்துச்சாமி வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறைக்கும், முத்துச்சாமிக்கும் தகவல் கொடுத்தனர். அவரது வீட்டிலுள்ள 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு நகைகளும், பணமும் திருட்டு போயுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எப்போதும் பரபரப்பான பகுதியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரி வீட்டிலேயே நடைபெற்ற இந்த திருட்டு அந்தப் பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+