எந்த சாய்பாபா சிலையை வைப்பது?-குழப்பத்தில் சாய் அறக்கட்டளை
புட்டபர்த்தி: சாய்பாபாவின் ஆசிரமத்தில் வைக்க சச்சின் டெண்டுல்கர் தங்க முலாம் பூசிய சாய்பாபாவின் சிலையை கொடுக்க முன்வந்துள்ளார். அதே சமயம் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் தங்க சிலை கொடுக்க முன்வந்துள்ளார். இதனால் எந்த சிலையை வைப்பதென்று சாய் அறக்கட்டளையினர் குழப்பத்தில் உள்ளனர்.
சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் பாபாவின் தங்க சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாய்பாபாவின் தீவிர பக்தரான சச்சின் டெண்டுல்கர் தங்க முலாம் பூசிய பாபா சிலையைக் கொடுக்க முன்வந்துள்ளார். அதே சமயம் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் தங்க சிலையையே கொடுக்க முன்வந்துள்ளார்.
நேற்று சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த இரண்டு சிலைகளில் எதை வைக்க என்று உறுப்பினர்கள் குழம்பினர். இதனால் கூட்டம் வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டல்கர் கொடுக்கும் சிலையை வைத்தால், அமெரிக்க வாழ் இந்தியர் மன வருத்தம் அடையக்கூடும். அதே சமயம் அவர் கொடுக்கும் தங்க சிலையை வைத்தால் சாய்பாபா பக்தரான சச்சின் ஏமாற்றம் அடையக்கூடும். இதனால் அறக்கட்டளை உறுப்பினர்கள் தர்ம சங்கடத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications