தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீதை பிடித்துத் தருமா அமெரிக்கா?

தனக்கு வந்தால்தான் வலியும், நோயும் என்பார்கள். அதேபோல இந்தியா தீவிரவாதத்தால் பல காலமாக அவதிப்பட்டு வந்தபோதிலும் அதை நி்வர்த்தி செய்யவோ, பாகிஸ்தானை கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முயன்றதில்லை அமெரிக்கா. மாறாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பொங்கத் தொடங்கும்போதெல்லாம் உள்ளே புகுந்து பொசுக்கென்று சூட்டைத் தணித்து பாகிஸ்தானைக் காப்பதிலேயே அது கவனமாக இருந்தது.
ஆனால் நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர்தான் அமெரிக்காவுக்கு தீவிரவாதத்தின் வலி புரிந்தது. அதன் விபரீதம் புரிந்தது. இதையடுத்து அது தீவிரமாக வேட்டையில் குதித்து கடைசியில் பின்லேடனை கொன்று தனது நாட்டு மக்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் அமர்ந்தபடி திட்டமிட்டு, பல்வேறு தீவிரவாத செயல்களை இந்தியாவில் அரங்கேற்றிய பலரும் இன்னும் பாகிஸ்தானில்தான் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் உள்ளிட்டோர் இவர்களில் சிலர். இவர்களில் ஹபீஸ் சயீத், மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் மூளை ஆவார். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவே இல்லை.
சயீத்துக்கு, மும்பைத் தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது இந்தியா. இந்த ஆதாரங்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமும் தெரிவித்துள்ளது.+
தற்போது பின்லேடன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மீதான தனது நெருக்கடியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. இந்த விஷயத்தில் அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எண்ணமும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தவிர பின்லேடன் உள்ளிட்ட பலரும் கூட பாகிஸ்தானில்தான் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று இந்தியா பல முறை சொல்லியுள்ளது. தொடர்ந்து கூறியும் வந்தது. ஹபீஸ் சயீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அது பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இதை அமெரிக்கா கூட பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
அதேபோல மும்பையில் முன்பு நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவரான தாவூத் இப்ராகிமை ஒப்படைகக் கோரி இந்தியா விடுத்த வேண்டுகோள்களையும் இதுவரை பாகிஸ்தான் ஏற்கவே இல்லை.
எனவே இந்தியாவுக்கு உதவும் வகையில் இவர்களையும் பிடித்துத் தர அமெரி்ககா உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதேபோல, பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்டவும், அவர்களின் முகாம்களை அழிக்கவும் அமெரிக்கா நினைத்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
ஆனால் அதை அமெரிக்கா நிறைவேற்றுமா என்பது சந்தேகம்தான்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications