மின்வாரிய தலைவருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: கோவையில் நாளை போராட்டம்
கோவை: கோவையில் மின்வாரிய தலைவருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
தொடரும் மின் வெட்டை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் மே 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவு பெருகியது. கோவையில் பிடித்த இந்த நெருப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. கோவையில் போராட்டம் நடைபெறும் அதே நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தை
இந்நிலையில் கோவையிலுள்ள தொழில் அமைப்புகளை சமாதானப்படுத்தி, போராட்டத்தை வாபஸ் பெறும் முயற்சியில் மின்வாரியத் தலைவர் சி.பி. சிங் கோவை வந்தார். தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை துவங்கியது. கலெக்டர் உமாநாத், வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம், தலைமைப் பொறியாளர் தங்கவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா கந்தசாமி, காட்மா ரவிக்குமார், சேம்பர் ஆஃப் காமர்ஸ் கிருஷ்ணன், மின் நுகர்வோர் சங்கம் இளங்கோ, விவசாயிகள் சங்கம் தனபால் உள்ளிட்ட 24 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது.
தோல்வி
தொழில் அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட ஏழு கோரிக்கைகளில் எதையும் நிறைவேற்றுவதாக மின்வாரியம் உறுதி அளிக்கவில்லை. மின் தடையை சமமாகப் பகிர வேண்டும் என்பதையும் சி.பி.சிங் ஏற்கவில்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
திட்டமிட்டபடி போராட்டம்
விரைவில் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறுகிறார்களே தவிர, மின் தடையால் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகளை மின் வாரியம் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை எனவே திட்டமிட்டபடி மாபெரும் போராட்டம் நடைபெறும் என கொடிசியா தலைவர் கந்தசாமி கூறினார்.
-
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications