பரபரப்பான சூழ்நிலையில் கருணாநிதி-தங்கபாலு சந்திப்பு

இந்தச் சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
முதல்வரை வழக்கமாக மரியாதை நிமித்தமாகச் சந்திப்பேன். அந்த அடிப்படையில் தான் இன்றைக்கும் சந்திருக்கிறேன். நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக பணியாற்றியது, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கியுள்ள திட்டங்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் திருப்திகரமான முறையில் அமலாக்கப்பட்டுள்ளன.
ஆகவே தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆற்றி வரும் பணிகளுக்கும், மத்தியில் அன்னை சோனியா காந்தி வழி காட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆற்றி வரும் அரும் பணிகளுக்கும் தமிழக மக்கள் சிறந்த பரிசாக வெற்றியைக் கொடுப்பார்கள்.
அரசின் சாதனைகளுக்காக தமிழக மக்கள் வாக்களித்திருப்பது மிகச் சிறந்த பாக்கியம், தமிழக முதல்வராக கலைஞர் 6வது முறையாக பதவியேற்பார் என்றார்.
கேள்வி: சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே?. தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் போது, கூட்டணி அரசு அமைத்தால், அதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா?
தங்கபாலு: எங்களுடைய முக்கியமான குறிக்கோள் தமிழகத்தில் மீண்டும் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்பது தான். அது தான் எங்களுடைய வேண்டுகோள். அதற்குத் தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மற்ற விஷயங்களைப் பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications