திகார் சிறையில் 48வது பிறந்தநாள் கொண்டாடும் ஆ.ராசா
Subscribe to Oneindia Tamil

முன்னாள் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்து ராசா 1963-ம் ஆண்டு பெரம்பலூரில் பிறந்தார். தனது சட்டப்படிப்பை முடித்த அவர் திமுகவில் இணைந்தார். தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆனார். அது வரை ஆ.ராசா என்றால் இந்தியாவில் மட்டும் பிரபலமாக இருந்த அவர் 2 ஜி ஊழல் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
2ஜி ஊழலுக்கு பொறுப்பேற்று தனது பதவியை கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி ராஜினாமா செய்தார்.
2ஜி ஊழல் தொடர்பாக சிபிஐ ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்புத் துறை செயலாளர் பெகுரா, பல்வா ஆகியோரை கைது செய்தது. அவர்கள் அனைவரும் தற்போது திகார் சிறையில் உள்ளனர். 2ஜி வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நாளை ராசா தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications