தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.3 லட்சம் நவீன கருவிகள் கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறையை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயக்க கூடிய இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர நூற்றுக்கனக்கானோர் உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி மருத்துவமனை என்டோஸ்கோப்பிக் சர்ஜிக்கல் ரூமை உடைத்து உள்ளை புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நவீன கருவியான புரோப் என்ற கருவியை எடுத்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகும்.
மேலும் அந்த அறையி்ல் இருந்த ரூ.1 லட்சத்து 25 மதிப்புள்ள எல்சிடி மானிட்டர், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெரின்கோஸ் கோப்பி, ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 3 பித்தளை நல்லிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நவீன கருவிகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்னம் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
நவீன கருவிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஓத்துழைப்பு இல்லாமல் இந்த சம்பவம் நடந்திருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் நவீன கருவிகளை மருத்துவமனையின் அறையில் இருந்து கழற்றி செல்ல அந்த தொழிலில் சம்பந்தம் உடையவர்கள்தான் எளிதாக எடுத்து செல்ல முடியும் என்பதால் தூத்துக்குடி நகரத்தில் எஸ்க்ரே யூனிட் உள்ளிட்ட நிலையங்களை வைத்துள்ள நபர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications