கனிமொழி, சரத்குமாரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். சரத்குமார் ரெட்டியும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கலாகியுள்ளது.
இதைடுத்து இருவரும் கடந்த 6ம் தேதி சிபிஐ கோர்ட்டில் ஆஜராகினர். முன்ஜாமீன் கோரி மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த மனு மீதான தீர்ப்பு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டது. அதை ஏற்று இருவரும் இன்று டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.












Click it and Unblock the Notifications