உலகிலேயே உயரமான பர்ஜ் கலீபா கட்டடத்திலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Dubai Burj Kalifa
துபாய்: உலகிலேயே மிகவும் உயரமான, துபாயின் பர்ஜ் கலீபா கட்டடத்திலிருந்து குதித்து 30 வயதான இந்தியர் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த கட்டடத்தின் 108வது மாடியிலிருந்து அந்த இந்தியர் குதித்தார். இக்கட்டடம் மொத்தம் 147 மாடிகளைக் கொண்டதாகும். கட்டடத்திலிருந்து குதித்த அவர், அதன் சுவரில் பலமுறை மோதி உடல் சிதறி கீழே விழுந்தார்.

இந்த நபர் பர்ஜ் கலீபாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அலுவலகத்தில் அவருக்கு வருடாந்திர விடுமுறை கிடைக்காததால் அதிருப்தி அடைந்து அவர் சோகத்தில் தற்கொலை முடிவை நாடியுள்ளார்.

துபாய் போலீஸார் சம்பவம் குறித்து அறிந்ததும், அங்கு வந்து சிதறிப் போயிருந்த அந்த இந்தியரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இந்தியர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+