துபாய் கிரஸெண்ட் பள்ளி பிளஸ் டூ தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி தமிழக அரசு கல்வித்துறை நடத்திய பிளஸ் டூ தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதிய 16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இஸ்ரா சுலைமான் 87 சதவீதமும், நீலினா பாபுராஜ் மற்றும் டில்னா திலீப் குமார் ஆகியோர் 86 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
நீலினா பாபுராஜ் வணிகவியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி நிர்வாகிகளையும், சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களையும் பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications