ஆந்திரா இடைத்தேர்தலில் ஜெகனும், அவரது தாயாரும் அமோக வெற்றி
Subscribe to Oneindia Tamil

கடப்பா மக்களவை தொகுதி மற்றும் புலிவெந்தலா சட்டசபை தொகுதியிலும் கடந்த 8-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிநிதிகளாக இருந்த ஜெகனும், அவரது தாயார் விஜயலக்ஷ்மியும் காங்கிரஸில் இருந்து விலகி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் தான் இடைத் தேர்தல் நடந்தது.
இன்று இந்த 2 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஜெகன் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.வி. மைசூரா ரெட்டியை விட 5 லட்சத்து 43 ஆயிரத்து 53 அதிகமாகப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
அவரது தாயார் விஜயலக்ஷ்மி தனது மைத்துனனும், காங்கிரஸ் வேட்பாளருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டியை 85 ஆயிரத்து 191 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
காங்கிரஸை விட்டு வெளியேறி முதன்முதலாக தேர்தலை சந்தித்த ஜெகனுக்கு இது முதல் வெற்றி. இதன் மூலம் அவரது பலத்தை நிரூபித்துள்ளார்.












Click it and Unblock the Notifications