பெட்ரோல் விலை உயர்வு துரதிருஷ்டவசமானது!- ஜெயலலிதா

புதிய ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, இன்று காலை ஆளுநர் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நிருபர்களுக்கு ராஜ்பவனில் பேட்டியளித்தார் ஜெயலலிதா.
அப்போது, நீங்கள் புதிய முதல்வராகப் பதவி ஏற்கும் நேரத்தில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது", என்றார்.
ஆனால் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அவர் வேறு எதையும் கூற மறுத்துவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 5 ரூபாய் விலையை உயர்த்தப் போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ஜெயலலிதா எதுவும் பேசாமல் விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா முன்வைத்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications