என்ஜினில் தீ: சிங்கப்பூரில் அவசரமாக தரையிங்கிய காதே பசிபிக் விமானம்
Subscribe to Oneindia Tamil
ஹாங்காங்: காதே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் 2-வது என்ஜினில் தீப்பிடித்ததால் சிங்கப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவுக்கு காதே பசிபிக் விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடத்திலேயே விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து அந்த விமான நிறுவனம் கூறியதாவது,
தரையிறங்கிய பிறகு சிங்கப்பூர் தீயணைப்பு படையினர் விமானத்தின் 2-வது என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டனர். அதில் இருந்த விமானிகளும், பயணிகளும் சிங்கப்பூர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் இன்று வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றது.












Click it and Unblock the Notifications