சீனாவில் இனி வீட்டுக்கொரு நாய் மட்டுமே: புதிய சட்டம் அமல்

சீனாவில் மக்கள் தொகை தான் அதிகம் என்று நினைத்தால் நாய்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தான் இருக்கிறது. மக்கள் தொகையைக் குறைக்க வீட்டுக்கொரு குழந்தை சட்டம் அமலுக்கு வந்தது. தற்போது நாய்களின் எண்ணிக்கையை குறைக்க வீட்டுக்கொரு நாய் சட்டம் வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தால் சீனாவின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் வெறிநாய்க்கடி பரவுவதைக் குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஷாங்காயில் மொத்தம் 8 லட்சம் நாய்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 40 ஆயிரம் நாய்கள் மட்டுமே அதிகாரிப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்ய 186 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்பதால் பலர் தங்கள் நாய்களை பதிவு செய்வதில்லை.
நேற்று முதல் மக்கள் எங்கு தங்கியிருக்கிறார்களோ, அதற்கேற்ப வருடாந்திர கட்டணம் 8 முதல் 46 பவுண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் வைத்திருப்பவர்கள் இந்த வார்த்திற்குள் பதிவு செய்துவிட்டால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.
இந்த புதிய சட்டத்தால் நடுத்தர குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications