தூத்துக்குடி, நெல்லைக்கு 4 அமைச்சர்கள்: தூத்துக்குடிக்கு மீண்டும் விஐபி அந்தஸ்து
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் வெற்றி பெற்ற 4 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். இதில் இருவர் புதியவர்கள். இருவர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். தூத்துக்குடி தொகுதிக்கு மீண்டும் விஐபி அந்தஸ்து கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. நெல்லையில் 9 தொகுதிகளிலும், தூத்துக்குடியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஜெயலலிதா இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார். முன்னதாக அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா சட்டத்துறை அமைச்சராகவும், சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற கருபபசாமி கால்நடைதுறை அமைச்சராகவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வென்ற எஸ்பி சண்முகநாதன் இந்து அறநிலையத் துறை அமைச்சராகவும், தூத்துக்குடியில் வெற்றி பெற்ற செல்லபாண்டியன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் வெற்றி பெற்ற இருவர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தற்போது்ம் இருவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 4 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications