2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி கறுப்புப் பணம் மீட்பு
டெல்லி: நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ.30,000 கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா கூறினார். கடந்த இரு ஆண்டுகளில் இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் அவர் பேசுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்டிருந்த கறுப்புப் பணம் ரூ. 30,000 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்தால் இவ்வாறு கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இந்த கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது. ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், யாருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடுவது கிடையாது.
கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள் செலுத்திய வரி திரும்ப (ரீபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடியாகும்.
இந்த ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் வருமான வரியாக ரூ. 74,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15ம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28,000 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையை விட இது மூன்று மடங்கு அதிகம்.
வருமான வரித்துறையில் கிரிமினல் புலனாய்வு இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துவிட்டார்.
மேலும் ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கறுப்புப் பணம் விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறோம். வரி விதிக்கப்படாத 14 நாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுடன் பேசி வருகிறோம். இதில் பஹாமஸ், ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் நாம் கேட்கும் தகவல்களை அளிக்கின்றன. இந்தத் தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்யவோ அல்லது இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் வர்த்தகம் செய்யவோ மிக அதிகமான வரிகளை விதிக்கலாம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications