துக்க தினத்திற்காக கடைகளை அடைக்கச் சொன்னோமா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்
கொழும்பு: மே 18-ம் தேதி அன்று தமிழீழ தேசிய துக்க தினத்திற்காக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைக்க ஒரு போதும் நிர்பந்தம் செய்யவில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே 18-ம் தேதி தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தினையோ அல்லது பொது நிறுவனத்தினையோ மூடும்படி கேட்டுக் கொள்ளவில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வர்த்தக நிறுவனங்களை மூடும்படி கோரியாதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க தகவல் துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் கூறியதாவது,
தமிழர் விடுதலைக்கு தமிழக மக்களும், வர்த்தகப் பெருமக்களும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு அளப்பரியது என்பதனை நாங்கள் அறிவோம்.
துயரத்தை பகிர்ந்து கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களுக்கோ அல்லது எந்த ஒரு வர்த்தக நிறுவத்திற்கோ எந்த விதமான அசெளகரியத்தையும் கொடுக்கக் கூடாது என்பது நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு.
எனவே, துயரம் சுமந்த இதயத்துடன் அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் இயன்றவரை பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications