துக்க தினத்திற்காக கடைகளை அடைக்கச் சொன்னோமா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்
கொழும்பு: மே 18-ம் தேதி அன்று தமிழீழ தேசிய துக்க தினத்திற்காக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைக்க ஒரு போதும் நிர்பந்தம் செய்யவில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே 18-ம் தேதி தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தினையோ அல்லது பொது நிறுவனத்தினையோ மூடும்படி கேட்டுக் கொள்ளவில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வர்த்தக நிறுவனங்களை மூடும்படி கோரியாதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க தகவல் துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் கூறியதாவது,
தமிழர் விடுதலைக்கு தமிழக மக்களும், வர்த்தகப் பெருமக்களும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு அளப்பரியது என்பதனை நாங்கள் அறிவோம்.
துயரத்தை பகிர்ந்து கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களுக்கோ அல்லது எந்த ஒரு வர்த்தக நிறுவத்திற்கோ எந்த விதமான அசெளகரியத்தையும் கொடுக்கக் கூடாது என்பது நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு.
எனவே, துயரம் சுமந்த இதயத்துடன் அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் இயன்றவரை பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications