சென்னை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ரணிலும் ஏற்றுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.
ரணில் சென்னை வருவது உறுதியானால், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் இலங்கைத் தலைவர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கே தரப்பில் கூறுகையில், சென்னைக்கு வருமாறு ஜெயலலிதாவிடமிருந்து ரணிலுக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் அதை ஏற்றுள்ளார். இருப்பினும் எப்போது முதல்வர் ஜெயலலிதாவை ரணில் சந்திப்பார் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றனர்
Opposition leader Ranil Wickremesinghe is to visit Tamil Nadu following an invitation by the newly elected Chief Minister of the South Indian state Jayalalithaa Jayaram, sources close to Wickremesinghe said. They said no date has been fixed for the visit though Wickremesinghe had told his close associates that he had accepted the invitation.