சென்செக்ஸில் இன்று மந்த நிலை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்ற இறக்கமற்ற மந்த நிலை காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் 18.64 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 18,016.43 புள்ளிகளில் தொடங்கியது. அதிகபட்சமாக 18,110.39 புள்ளிகளும் குறைந்தபட்சமாக 17,933.94 புள்ளிகளிலும் வர்த்தகம் நடந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 18,011.97 புள்ளிகளில் நிலைப் பெற்றது. சென்செக்ஸ் 18.64 புள்ளிகள் உயர்வு.
தேசிய பங்கு சந்தை நிப்டி 5398.7 புள்ளிகளில் முடிந்தது. நிப்டியில் 12.15 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எச்.டி.எப்.சி, ஏர்டெல், ஜிண்டல் ஸ்டீல்ஸ், சிப்லா போன்றவை சுமாரான லாபத்தில் கைமாறின.
டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டல்கோ, ஐடிசி, எஸ் பி ஐ, ஒஎன்ஜிசி பங்குகள் சரிவைச் சந்தித்தன.












Click it and Unblock the Notifications