Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மாவட்டத்தில் குற்றங்கள் குறைக்கப்படும்: புதிய எஸ்.பி. உமா உறுதி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் குற்றங்கள் குறைக்கப்படும் என நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.பி. உமா தெரிவித்தார்.

புதிய எஸ்.பி.

கோவை மாவட்ட எஸ்.பி.-ஆக இருந்த கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் உமா நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

உமா, கடந்த 1999-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சியில் பணியை துவக்கினார். பின்னர் தஞ்சை, தாராபுரம் பகுதிகளில் டி.எஸ்.பி. ஆகவும், நெல்லை மாநகரில் ஏ.டி.எஸ்.பி.ஆகவும், கோவை மாநகர துணை கமிஷனராகவும் (தலைமையகம்), சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.

இரண்டாவது பெண் எஸ்.பி.

இவர் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டாவது பெண் எஸ்.பி. ஆவார்.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து உமா கூறியதாவது,

இன்னும் சில நாட்களில் மாவட்டத்தில் உள்ள 33 காவல் நிலையங்களிலும், சப் - டிவிஷன் டி.எஸ்.பி. அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றங்கள் குறைக்கப்படும். ரூரல் காவல் நிலையங்களில் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

சூலூர் சப்-டிவிஷன்

சூலூர் சப்-டிவிஷனை மீண்டும் துவக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பினைக் கருத்தில் கொண்டு, சூலூர் சப்-டிவிஷனை விரைவில் துவக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+