நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது

அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஞானம் என்பவரும் நெதர்லாந்து உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் புலிகளின் மற்றொரு முக்கியத் தலைவரான நெடியவன் நார்வே நாட்டு தலைநகர் ஓஸ்லோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமச்சந்திரனிடம் இருந்து நெதர்லாந்து உளவுப் பிரிவினர் கைப்பற்றிய கம்ப்யூட்டர், பென் டிரைவ், ஆவணங்களில் புலிகள் அமைப்புக்காக திரட்டப்பட்டு, சேமித்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் தான் நெடியவனை நார்வே போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ரேடியோ நெதர்லாந்து வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க உளவுப் பிரிவான எப்பிஐயிடம் பார்த்தீபன் தவராஜா என்ற புலிகளின் முக்கிய தலைவர் சிக்கியுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீஸ் படை அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கியதில் முக்கிய பங்கு வகித்தவரான பார்த்தீபனிடம் அமெரிக்கா நடத்தியுள்ள விசாரணையில், அவர் 20 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வெடி பொருட்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், படகுகளில் பொருத்தப்படும் துப்பாக்கிகள், ஏவுகணைகள், மெஷின் கன்கள், கிரனைடுகள்-கிரனைட் லாஞ்சர்கள், ரேடார்கள் உள்ளிட்டவற்றை சீனா பல நாடுகளிலும் வாங்கி புலிகளுக்கு அனுப்பி வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும்,
தான் ஆயுதங்கள் வாங்க நெதர்லாந்தில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் உதவினார் என்று பார்த்தீபன் வாக்குமூலம் தந்துள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே ராமச்சந்திரனை நெதர்லாந்து போலீசார் கைது செய்ததாகவும் அந்த ரேடியோ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நெடியவனிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீஸ் குழு நார்வேவுக்கும் செல்லும் என்றும் அந்த ரேடியோ தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கே.பியிடமும் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீசார் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசிடம் நெதர்லாந்து வெளியுறவுத்துறை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications