டெல்லி உயர்நீதிமன்றம் அருகே காரில் குண்டுவெடிப்பு?-பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில், பலத்த சப்தம் கேட்டது. அதில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினரும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்றிருந்த வெள்ளை நிற போர்டு காரின் பானட் பகுதியில் இந்த சப்தம் கேட்டது. இதனால் காரில் தீவிபத்தும் ஏற்பட்டது.
இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. காரில் வெடித்தது குண்டா என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications