சென்னை தவிர மேலும் 3 இடங்களில் பி.இ கவுன்சிலிங்-அரசு திட்டம்
சென்னை: சென்னையில் மட்டுமே தற்போது நடந்து வரும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் எனப்படும் கலந்தாய்வை மேலும் 3 நகரங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு யோசித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் அல்லாமல் ஒற்றைச் சாளர முறையில், அதாவது மாணவர்களை நேரில் வரவழைத்து கலந்தாய்வு மூலம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மட்டும்தான் கலந்தாய்வை நடத்துகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து வகையான 484 பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த ஒரு மையம மூலம் மட்டுமே மாணவர் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.
இதை மாற்றி சென்னைக்கு வெளியே வேறு சில முக்கிய நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த வேண்டும். இதன் மூலம் பெற்றோர்கள், மாணவர்களுக்கு வீண் செலவு, அலைச்சல், மன அழுத்தம் உள்ளிட்டவற்றைக் குறைக்கலாம் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் கடந்த திமுகஆட்சியில் இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சி, இதுகுறித்து பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
அதன்படி சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்தான் கலந்தாய்வு நடந்து வருகிறது. அதை மாற்றி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இதை கொண்டு வருவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.
ஜூன் 3வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கவுள்ளதால், மிகவும் குறுகிய காலமே உள்ளது. எனவே கலந்தாய்வை வேறு சில நகரங்களிலும் நடத்துவது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications