சமச்சீர் கல்வி ரத்தால் வரிப்பணம் ரூ.500 கோடி வீண்-கி.வீரமணி

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: சமச்சீர் கல்வி ரத்தால் 500 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக திராவிடர்க ழக தலைவர் கி வீரமணி கூறியுள்ளார்.

குற்றாலத்தில் நான்கு நாட்கள் நடந்த பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி சான்றிதல்கள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

குற்றாலத்தில் ஆண்டுதோறும் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 34வது ஆண்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவில் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

தேர்தல் முடிவு வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜனநாயகத்தில் எதிர்பாராத முடிவு ஏற்படுவது இது முதல் முறை அல்ல. தி்முக ஆட்சி அமைத்தால் அது கூட்டணி அரசாக இருக்கும் என்பதால் மக்கள் அதனை ஏற்கவில்லை. தனித்து ஆட்சி அமைய வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவை மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் தவிர்க்க வேண்டும். சமச்சீர் கல்விக்காக மொத்தம் 500 கோடி வரை செலவான நிலையில் அவை அனைத்தையும் அரசு ஓதுக்க தள்ளியது பெற்றோர், மாணவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செயலாகும்.

இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.500 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சட்டபேரவை கட்டிடத்தை பயன்படுத்த மாட்டோம் என்று
கூறுவது கடந்த ஆட்சியில் பாலங்கள், சாலைகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று கூறுவதற்கு சமம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+