கருணாநிதி, துரைமுருகன் நாளை எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு

மே 23ம் தேதி தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இருப்பினும் அதிமுக தரப்பில் அமைச்சர் என்.ஆர். சிவபதி, மனோகரன் ஆகியோரும், திமுக தரப்பில் கருணாநிதி, துரைமுருகன் ஆகியோரும் பதவியேற்கவில்லை.
அமைச்சர் மரியம் பிச்சையின் உடல் அடக்க நிகழ்ச்சிக்காக சிவபதியும், மனோகரனும் திருச்சியில் இருந்ததால் அன்று பதவியேற்கவில்லை.அதேபோல மகள் கனிமொழியை திஹார் சிறைக்குச் சென்று பார்க்க கருணாநிதி மற்றும் துரைமுருகன் போய் விட்டதால் அவர்களும் வரவில்லை.
அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிவபதியும், மனோகரனும் எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் கருணாநிதியும், துரைமுருகனும் நாளை எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்கவுள்ளனர். சபாநாயகர் அறையில் இருவரும் பதவியேற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.












Click it and Unblock the Notifications