கோவை சிறையில் கைதிகளும் சிறைக்காவலர்களும் மோதல்
கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது.
பிரச்சனை
கோவை சிறையின் 'டவர் பிளாக்" பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தன்னை வேறு அறைக்கு மாற்றும்படி அருகிலிருந்த காவலரிடம் கேட்டுள்ளார். சிறை நிர்வாகிகளின் அனுமதியின்றி கைதி அறையை மாற்ற முடியாது என காவலர் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கைதி சிறைக்காவலர்களை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். இதனால், இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
கைதிகள் போராட்டம்
காவலர்கள் சம்பந்தப்பட்ட கைதியை தனி அறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி அடித்ததாக சக கைதிகள் மத்தியில் பரவியது. இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை
கைதிகள் உணவைப் புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால், கைதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய சிறை அதிகாரிகள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கைதிகளிடம் உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications