டெல்லி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
டெல்லி: தெற்கு டெல்லியில் கார்கி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனம் மற்றும் இரு பென்சில் பேட்டரிகள் கிடந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
5 நாட்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந் நிலையில் இன்று கார்கி கல்லூரியில் வெடி பொருட்கள் கிடந்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கேல்காவ்ன் மார்க் அருகே உள்ள இந்தக் கல்லூரியின் பஸ் ஸ்டாப் அருகே மர்ம பார்சல் கிடந்தது. இதையடுத்து பீதியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அதை சோதனையிட்டபோது வெடி பொருட்கள், வயர்கள், பென்சில் பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது.
பீதியை உண்டாக்கும் நோக்கத்தில் இந்த வெடி பொருளை சில போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
டெல்லியில் ஒரே வாரத்தில் இரண்டு இடங்களில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications