அக்னி நட்சத்திரத்திற்கு விடை கொடுத்த சாரல்!

தமிழகத்தில் கடந்த 1 மாதமாக அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கொளுத்திய கோடை வெயிலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் மக்கள் கோடையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தென்காசி வட்டாரப் பகுதி குற்றாலத்திலிருந்து மேக்கரை வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பலத்த காற்றும், அதிகாலை முதல் சாரல் மழையும் தூவியது.
மாலை 5 மணிக்கு செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதியில் திடீர் மேகக் கூட்டங்கள் உருவாகி அக்னி நட்சத்திரத்திற்கு விடை கொடுக்கும் வண்ணம் சாரல் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அதற்கு முன்னாதகவே பருவமழை தொடங்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை
தென் மேற்குப் பருவ மழை முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மயிலாடுதுறை, இழுப்பூர், ஆத்தூர், வால்பாறை, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் 20 மில்லி மீட்டர் மழையும், கீரனூர், தேவலா, குந்தா பாலம் ஆகிய பகுதிகளில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.












Click it and Unblock the Notifications