இலங்கையை இந்தியாவிடம் அடகு வைத்து விட்டார் பெரீஸ்-சிங்கள பிக்குகள் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவிடம், இலங்கையை அடகு வைத்து விட்டார் வெளியுறவு அமைச்சர் பெரீஸ். இந்தியாவுடன் அவர் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று சிங்கள, தேசிய பிக்குகள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையை இந்தியாவுக்கு காட்டிக் கொடுத்து விட்டார் பெரீஸ் என்றும் அது கூறியுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தேசிய பிக்குகள் முன்னணியின்த லைவர் ஹந்துகலா ரத்னபாலா தேரோ. அப்போது அவர் கூறுகையில், இலங்கையை தற்போது தன் பாதைக்குத் திருப்பி ஆதிக்கம் செலுத்த இந்தியா முயலுக்கிறது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை அது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

பெரீஸ் சமீபத்தில் இந்தியா சென்றபோது இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை இதை நிரூபிப்பதாக உள்ளது.

இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதில் தவறில்லை என்ற போதிலும் அடிமையாகிச் செயல்பட முடியாது. 13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்தல், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், மனித உரிமை மீறல் விசாரணை என பல்வேறு வழிகளில் இந்தியா, இலங்கை மீது நெருக்கடிகளை திணித்து வருகிறது.

விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கையை மீட்ட பின்னர் இப்போது சிலர் போர் வெற்றியை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+