சர்தாரி பழங்குடியின தலைவரானார் பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோ

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
சர்தாரி பழங்குடியின வழக்கத்தின்படி தலைவர் இறந்த பிறகு அவரது மூத்த மகன் தலைவராக்கப்படுவார். மூன்றாவது நாள் இறந்தவர்களின் ஆத்மாவுக்காக நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தின்போது புதிய தலைவர் பற்றி அறிவிக்கப்படும்.
சர்தாரி இன தலைவராக தற்போது ஆசிப் அலி சர்தாரி இருக்கிறார். ஆனால் தான் உயிருடன் இருக்கும்போதே தனது மகனை தலைவராக்க அவர் முடிவு செய்து விட்டார்.
யார் இந்த சர்தாரி?
பாகிஸ்தானில் வசிக்கும் பழங்குடியினத்தவர்கள் தான் சர்தாரி. இவர்களின் பூர்வீகம் பலுசிஸ்தான் ஆகும். இவர்கள் பலூச் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பெரும்பாலும் சிந்தி மொழியைத்தான் பேசுகிறார்கள்.
சர்தாரி பழங்குடியினத்தவர்கள் பலுசிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் வந்து குடியேறியவர்கள். காலப் போக்கில் இவர்கள் தங்கள் சொந்த மொழியான பலூச்சியைவிட்டு சிந்தியை முதல் மொழியாகக் கொண்டனர்.
சிந்த் மாகாணத்தில் வாழ்பவர்கள் சிலர் பலூச்சி மற்றும் சிந்தி மொழி பேசுவார்கள். பாகிஸ்தானில் உள்ள சிந்த் மக்களில் 40 சதவீதம் பேருக்கு பலூசிஸ்தான் தான் பூர்வீகம். சர்தாரி பழங்குடியினத்தவர்கள் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications