எஸ்.எம்.எஸ்ஸால் வந்த குழப்பம்-கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவி விடுதியறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு எஸ்.எம்.எஸ்.தான் இந்த தற்கொலைக்குக் காரணம் என்பது வேதனைக்குரியது.
கல்லூரி மாணவி
மதுரையைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகள் மீனலோஷினி. இவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏ.எம்.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.
செல்போன் எடுக்கவில்லை
நேற்று காலை மீனலோஷினியுடன் படிக்கும் ஜோசன் எனும் மாணவர் அந்த விடுதிக்கு வந்தார். விடுதி வார்டனிடம் மீனலோஷினியின் செல்போன் எண்களை பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. அவர் அறையில் இருக்கிறாரா என பார்க்கச் சொன்னார்.
தற்கொலை
இதனை அடுத்து மீனலோஷினியின் அறைக்குச் சென்ற வார்டன் அறை உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் தட்டினார். அறைக்கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த வார்டன் தன்னிடமிருந்த மாற்று சாவியைக் கொண்டு அறையினைத் திறந்தார். உள்ளே மீனலோஷினி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடிதம்
தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையில் மீனலோஷினி தன் தாய்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், தன் தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படியும், மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தால் உனக்கே மகளாகப் பிறக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தது.
தற்கொலைக்கு என்ன காரணம்?
மீனலோஷினி தன்னுடன் படித்து வந்த சக மாணவரைக் காதலித்து வந்தார். அவர் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறு எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது, சக மாணவிகளிடம் கூடப் பேசக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு வைத்திருந்தார். காதலரும் அதை தட்டாமல் கடைப்பிடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மீனலோஷினியின் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதை சீனியர் மாணவர் ஒருவர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீனலோஷினியிடம் பேசிய அவரது காதலர் எனக்கு மட்டும் கண்டிஷன் போடுகிறாயே, இது மட்டும் நியாயமா என்று கேட்டு சண்டை பிடித்துள்ளார்.
இதனால்தான் அவமானமுற்று மீனலோஷினி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications