மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ஓ.பன்னீர் செல்வம்

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கழகத்தொண்டர்களுக்கும் வெற்றிக்குப் பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்தார்.
அமைச்சருக்கு வரவேற்பு
போடிநகரம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பின்னர் ஆதிப்பட்டி, கோடாங்கிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் வாக்காளர்களை சந்தித்தார். தொகுதிக்கு வந்த நிதி அமைச்சர் பன்னீர் செல்வத்தை பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் வானவேடிக்கை நடத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆண்டிபட்டி தொகுதி
இதேபோல் ஆண்டிபட்டி சட்டமன்றத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தங்கத்தமிழ்ச்செல்வன் தனது தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து நன்றி தெரிவித்தார். தனது வெற்றிக்கு பாடுபட்ட கட்சித் தொண்டர்களுக்கும் கூட்டணிக்கட்சியினருக்கும் அவர் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications