மீண்டும் பெட்ரோல் விலை உயர்கிறது-லிட்டருக்கு ரூ. 1.30 உயரும்

இதை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மே 15ம் தேதியன்று லிட்டருக்கு ரூ. 5 வரை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். விரைவில் டீசல் விலையும், சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், பெட்ரோல் விலையே மீண்டும் உயரப் போகிறது. நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இந்த முறை லிட்டருக்கு ரூ. 1.30 வரை உயர்த்ததப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வீதம் உயர்த்தி கடந்த மே 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விலை உயர்வு போதாது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும்போது இந்த விலை உயர்வு குறைவானதே. பெட்ரோல் விலையில் ரூ.5 உயர்த்திய பிறகும் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு லிட்டருக்கு ரூ.4.58 நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications