கேபிள் டிவி ஆலோசனை குழு, வாரியத்தை கலைக்க கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை

நெல்லையில் தென் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில நிர்வாகி யுவராஜ் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தென் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பலர் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சியின் போது துவக்கப்பட்ட கேபிள் டிவி நல வாரியம், அரசு டிவி ஆலோசனை குழு ஆகியவை நியமிக்கப்பட்டது. இவை ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டது. ஆனால் இந்த குழு அரசுக்கு எந்த கருத்தையும் பரிந்துரை செய்யவில்லை. எனவே அந்த குழுவை கலைக்க வேண்டும்.
தற்போது வழங்கப்படும் அனலாக் முறையில் இல்லாமல், தெளிவான காட்சிகளுக்காக சென்னையில் உள்ளது போல, செட்டாப் பாக்ஸ் மூலம் அரசு கேபிள் டிவி யில் டிஜிட்டல் ஒளிபரப்பு மேற்கொள்ள வேண்டும்.
அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனை நம்பியிருந்த ஆபரேட்டர்களுக்கு சிறப்பு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications