வீட்டுச் செலவுக்கு ராசா கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் எடுக்க கோர்ட் அனுமதி
Subscribe to Oneindia Tamil

கடந்த நான்கு மாதங்களாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராசா. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தனது குடும்பச் செலவுக்கு பணம் எடுக்க அனுமதி தர வேண்டும் என்று கோரி ராசாவின் சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசாவின் வழக்கறிஞர் மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, ரூ. 1 லட்சம் வரை பணம் எடுக்க அனுமதித்தார். அதற்கான காசோலையில் ராசா கையெழுத்திடவும் அவர் அனுமதி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications